என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இங்கிலாந்தில் ‘ரோபோ’க்களால் 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்
லண்டன்:
சர்வதேச அளவில் எங்கும் எதிலும் ‘ரோபோக்கள்’ என்ற நிலை வந்து விட்டது. அனைத்து துறைகளிலும் நுழைந்துள்ள ‘ரோபோ’ எனும் எந்திர மனிதன் திறமையுடன் பணிபுரிந்து வருகிறான்.
இத்தகைய போக்கு எதிர் காலத்தில் மனிதர்களின் வேலைக்கு ஆபத்தாக முடியும் நிலை உள்ளது. இங்கிலாந்தை பொறுத்த வரை 30 சதவீதம் பணிகளை ‘ரோபோ’க்கள் செய்து வருகின்றன.
இவற்றின் செயல்பாடுகளால் இன்னும் 15 வருடங்களில் அங்கு 1 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுவிதமான அதி நவீன தொழில்நுட்ப ‘ரோபோ’க்கள் உருவாகி வருகின்றன. அவை தொழிலாளிகளின் பணியிடங்களை பறிக்கும் அபாயம் உள்ளதாக பி.டபிள்யூ.சி. என்ற ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் 22 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. ‘ரோபோ’க்கள் வருகையால் அவற்றில் 10 லட்சத்து 20 ஆயிரம் பணியிடங்கள் ஆபத்தான கால கட்டத்தில் உள்ளன. எனவே எதிர்காலத்தில் இவற்றை ‘ரோபோ’கள்கள் ஆக்கிரமிக்கும் நிலை உள்ளதாக உறுதிபடக் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்