என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய வம்சாவெளியை சேர்ந்த அம்மா, மகன் அமெரிக்காவில் கொலை: போலீசார் விசாரனை
Byமாலை மலர்24 March 2017 5:50 PM GMT (Updated: 24 March 2017 5:50 PM GMT)
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் ஐடி ஊழியர் மற்றும் அவரது ஆறு வயது மகன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
நியூ யார்க்:
அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் ஐடி துறையில் பணியாற்றி வந்த சசிகலா நர்ரா மற்றும் அவரது மகன் வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்திய வம்சாவெளியை சேர்ந்த அம்மா, மகன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவெளியை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தாலேயே அம்மா, மகன் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என பர்லிங்டன் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நியூ ஜெர்சியில் நடத்தப்பட்டுள்ள கொலை சம்பவத்தில் எவ்வித முன்விரோதமும் இருக்காது என்றே கூறப்படுகிறது.
கொலை சம்பவம் குறித்து இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X