search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வம்சாவெளியை சேர்ந்த அம்மா, மகன் அமெரிக்காவில் கொலை: போலீசார் விசாரனை
    X

    இந்திய வம்சாவெளியை சேர்ந்த அம்மா, மகன் அமெரிக்காவில் கொலை: போலீசார் விசாரனை

    அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் ஐடி ஊழியர் மற்றும் அவரது ஆறு வயது மகன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
    நியூ யார்க்:

    அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் ஐடி துறையில் பணியாற்றி வந்த சசிகலா நர்ரா மற்றும் அவரது மகன் வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்திய வம்சாவெளியை சேர்ந்த அம்மா, மகன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்திய வம்சாவெளியை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தாலேயே அம்மா, மகன் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என பர்லிங்டன் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நியூ ஜெர்சியில் நடத்தப்பட்டுள்ள கொலை சம்பவத்தில் எவ்வித முன்விரோதமும் இருக்காது என்றே கூறப்படுகிறது.  



    கொலை சம்பவம் குறித்து இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×