என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு புகார்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
Byமாலை மலர்24 March 2017 10:09 AM GMT (Updated: 24 March 2017 10:09 AM GMT)
5 மாநில தேர்தலில் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:
சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டி இருந்தனர். சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் இந்த புகார்களுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது.
இந்த புகார் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார். இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரத்தை வெளிநாட்டு ஆய்வாளர்களை கொண்டு சோதனை செய்ய வேண்டும், நம்பகத்தன்மை பற்றி சோதனை நடத்த வேண்டும் என்று தனது மனுவில் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் சந்திரசந்த் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 5 மாநில தேர்தலில் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு புகார் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து வழக்கு விசாரணை 4 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டி இருந்தனர். சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் இந்த புகார்களுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது.
இந்த புகார் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார். இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரத்தை வெளிநாட்டு ஆய்வாளர்களை கொண்டு சோதனை செய்ய வேண்டும், நம்பகத்தன்மை பற்றி சோதனை நடத்த வேண்டும் என்று தனது மனுவில் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் சந்திரசந்த் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 5 மாநில தேர்தலில் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு புகார் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து வழக்கு விசாரணை 4 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X