என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு
Byமாலை மலர்23 March 2017 1:15 PM GMT (Updated: 23 March 2017 1:15 PM GMT)
லண்டன் பாராளுமன்றம் அருகே நேற்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதி ஒருவன் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது காரை மோதிவிட்டு, போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்றான். அந்த தீவிரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி, தீவிரவாதி உட்பட 5 பேர் பலியாகினர். 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக 7 பேரை லண்டன் போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “லண்டன் பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நேற்று நடைபெற்ற தாக்குதலுக்கு, ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த வீரர் தான் காரணம்” என தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதி ஒருவன் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது காரை மோதிவிட்டு, போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்றான். அந்த தீவிரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி, தீவிரவாதி உட்பட 5 பேர் பலியாகினர். 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக 7 பேரை லண்டன் போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “லண்டன் பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நேற்று நடைபெற்ற தாக்குதலுக்கு, ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த வீரர் தான் காரணம்” என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X