என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெற்கு சூடான் விமான விபத்தில் 44 பயணிகளும் உயிர் பிழைத்த அதிசயம்!
Byமாலை மலர்21 March 2017 2:32 PM GMT (Updated: 21 March 2017 2:32 PM GMT)
தெற்கு சூடானில் 44 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம், திடீரென விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதில் 44 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூபா:
தெற்கு சூடானைச் சேர்ந்த ‘தி சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ்’க்கு சொந்தமான விமானம் ஒன்று விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது.
தெற்கு சூடானில் வடமேற்கு பகுதியில் உள்ள வாவு விமான நிலையத்தில் இந்த சம்பவத்தில் நடைபெற்றது. விமானம் தலைநகர் ஜூபாவில் இருந்து வாவு நகருக்கு வந்தது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என்று அந்நாட்டு அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் அடெனி கூறினார்.
விமானத்தின் வால்பகுதி மட்டும் தெரியும்படியும், மற்ற பகுதியில் எரிந்த நிலையில் சிதறிக்கிடக்கும் படங்களை உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளியிட்டதால் விமானத்தில் இருந்த 44 பயணிகளும், விமான ஊழியர்களும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்பட்டது.
விபத்து நடந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் அதிரடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விமானத்தில் இருந்த அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தில் 41 பெரியவர்களும், 3 சிறியவர்களும் இருந்தனர். அதேபோல், விமானக் குழுவைச் சேர்ந்த 5 பேரும் இருந்தனர். அதில் பலத்த காயமடைந்த 25 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு சூடானைச் சேர்ந்த ‘தி சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ்’க்கு சொந்தமான விமானம் ஒன்று விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது.
தெற்கு சூடானில் வடமேற்கு பகுதியில் உள்ள வாவு விமான நிலையத்தில் இந்த சம்பவத்தில் நடைபெற்றது. விமானம் தலைநகர் ஜூபாவில் இருந்து வாவு நகருக்கு வந்தது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என்று அந்நாட்டு அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் அடெனி கூறினார்.
விமானத்தின் வால்பகுதி மட்டும் தெரியும்படியும், மற்ற பகுதியில் எரிந்த நிலையில் சிதறிக்கிடக்கும் படங்களை உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளியிட்டதால் விமானத்தில் இருந்த 44 பயணிகளும், விமான ஊழியர்களும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்பட்டது.
விபத்து நடந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் அதிரடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விமானத்தில் இருந்த அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தில் 41 பெரியவர்களும், 3 சிறியவர்களும் இருந்தனர். அதேபோல், விமானக் குழுவைச் சேர்ந்த 5 பேரும் இருந்தனர். அதில் பலத்த காயமடைந்த 25 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X