என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெக்சிகோவில் ஆசிரியர்-2 மாணவர்களை துப்பாக்கியால் சுட்ட மாணவர் தற்கொலை
Byமாலை மலர்20 Jan 2017 5:41 AM GMT (Updated: 20 Jan 2017 5:41 AM GMT)
மெக்சிகோவில் ஆசிரியர் மற்றும் 2 மாணவர்களை சகமாணவர் துப்பாக்கியால் சுட்டான். பின்னர் தானும் தற்கெலை செய்து கொண்டான்.
மெக்சிகன் சிட்டி:
மெக்சிகோவில் வட கிழக்கு பகுதியில் உள்ள மான்டெர்ரி என்ற இடத்தில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இங்கு பெட்ரிகோ குவாரா (15) என்ற மாணவன் படித்து வந்தான்.
நேற்று பள்ளிக்கு வந்த அவன் வகுப்பறையில் இருந்தான். ஆசிரியை சிசிலியா கோலிஸ் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது மாணவன் பெட்ரிகோ தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் வகுப்பில் இருந்த சகமாணவர்கள் மற்றும் ஆசிரியரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான்.
இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே, வகுப்பறையில் இருந்து மாணவர்கள் வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இருந்தும் அவன் சரமாரியாக சுட்டான்.
அதில் ஆசிரியை சிசிலியா கோலிஸ் மற்றும் 2 மாணவர்கள் தலையில் குண்டு பாய்ந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர். உடனே அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய மாணவன் பெட்ரிகோ அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். அவன் மன அழுத்தத்துக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
மெக்சிகோவில் வட கிழக்கு பகுதியில் உள்ள மான்டெர்ரி என்ற இடத்தில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இங்கு பெட்ரிகோ குவாரா (15) என்ற மாணவன் படித்து வந்தான்.
நேற்று பள்ளிக்கு வந்த அவன் வகுப்பறையில் இருந்தான். ஆசிரியை சிசிலியா கோலிஸ் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது மாணவன் பெட்ரிகோ தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் வகுப்பில் இருந்த சகமாணவர்கள் மற்றும் ஆசிரியரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான்.
இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே, வகுப்பறையில் இருந்து மாணவர்கள் வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இருந்தும் அவன் சரமாரியாக சுட்டான்.
அதில் ஆசிரியை சிசிலியா கோலிஸ் மற்றும் 2 மாணவர்கள் தலையில் குண்டு பாய்ந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர். உடனே அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய மாணவன் பெட்ரிகோ அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். அவன் மன அழுத்தத்துக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X