என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டர்பன் அணிந்தால் பள்ளியில் சேர்க்க முடியாது: ஆஸ்திரேலியாவில் சீக்கிய மாணவனுக்கு அநீதி
Byமாலை மலர்17 Jan 2017 3:39 PM GMT (Updated: 17 Jan 2017 3:39 PM GMT)
ஆஸ்திரேலியாவில் டர்பன் அணிந்ததால் சீக்கிய மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
மெல்போர்ன்:
இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த சீக்கியர்கள் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். தங்களது டர்பன் அணியும் கலாச்சாரத்தை கடைபிடிப்பதில் சீக்கியர்கள் மற்ற நாடுகளில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் டர்பன் அணிந்ததால் சீக்கிய மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
சகர்தீப் சிங் அரோரா என்ற பெண்மணி தன்னுடைய மகனை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மெல்டான் கிறிஸ்துவ கல்லூரியில் சேர்க்க சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், “பள்ளியில் எங்கள் மத நடைமுறைகள் மற்றும் அடையாளத்தை கடை பிடிக்கக் கூடாது என்று என்னுடைய மகன் கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறான்.
இது தொடர்பாக விக்டோரியன் சம வாய்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் மூலம் எங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். மாணவர்கள் தங்களுடைய மத நம்பிக்கைகளை கடைபிடிக்க பள்ளிகள் அனுமதிக்காமல் இருப்பது நீதியற்ற செயல்” என்றார்.
இது தொடர்பாக எம்.சி.சி பள்ளி நிர்வாகம் அந்த ஆணையத்திற்கு எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளது. அதில் தங்களுடைய பள்ளி சீருடையில் நெறிமுறையில் அது இல்லை என்று கூறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுமார் 72 ஆயிரம் சீக்கியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த சீக்கியர்கள் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். தங்களது டர்பன் அணியும் கலாச்சாரத்தை கடைபிடிப்பதில் சீக்கியர்கள் மற்ற நாடுகளில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் டர்பன் அணிந்ததால் சீக்கிய மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
சகர்தீப் சிங் அரோரா என்ற பெண்மணி தன்னுடைய மகனை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மெல்டான் கிறிஸ்துவ கல்லூரியில் சேர்க்க சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், “பள்ளியில் எங்கள் மத நடைமுறைகள் மற்றும் அடையாளத்தை கடை பிடிக்கக் கூடாது என்று என்னுடைய மகன் கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறான்.
இது தொடர்பாக விக்டோரியன் சம வாய்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் மூலம் எங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். மாணவர்கள் தங்களுடைய மத நம்பிக்கைகளை கடைபிடிக்க பள்ளிகள் அனுமதிக்காமல் இருப்பது நீதியற்ற செயல்” என்றார்.
இது தொடர்பாக எம்.சி.சி பள்ளி நிர்வாகம் அந்த ஆணையத்திற்கு எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளது. அதில் தங்களுடைய பள்ளி சீருடையில் நெறிமுறையில் அது இல்லை என்று கூறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுமார் 72 ஆயிரம் சீக்கியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X