என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பத்திரிகை அட்டைப்படத்தால் உலகப்புகழ் பெற்ற ஆப்கன் அகதி பெண் பாகிஸ்தானில் கைது
Byமாலை மலர்26 Oct 2016 8:40 PM GMT (Updated: 26 Oct 2016 8:40 PM GMT)
பத்திரிகை அட்டைப்படத்தால் உலகப்புகழ் பெற்ற ஆப்கன் அகதி பெண் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்
பெஷாவர்L:
ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் ஷார்பத் குலா (வயது 44). 1984-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் போர் மூண்டபோது, அவர் 12 வயது சிறுமியாக இருந்தார். போருக்கு நடுவே, அங்கு இருக்க முடியாமல், பாகிஸ்தானுக்கு அகதிகளாக குடிபெயர்ந்தவர்களில் அவரும் ஒருவர். பெஷாவர் அருகே ஒரு அகதி முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டார்.
பச்சை நிற கண்களுடன் வித்தியாசமான சிறுமியாக தோன்றிய அவரை ‘நேஷனல் ஜியோகிரபி’ பத்திரிகையின் புகைப்படக்காரர் படம் பிடித்து ‘ஆப்கன் மோனலிசா’ என்ற அடைமொழியுடன் அட்டைப்படத்தில் வெளியிட்டார். அதனால், ஷார்பத் குலா உலகப்புகழ் பெற்றார். வளர்ந்த பிறகு, பாகிஸ்தானியர் ஒருவரை மணந்து கொண்ட ஷார்பத் குலா, 2 குழந்தைகளுக்கும் தாயானார்.
ஆப்கன் அகதிகள் ஆயிரக்கணக்கானோர், போலி அடையாள அட்டையுடன் பாகிஸ்தானில் தங்கி இருக்கிறார்கள். அவர்களில் ஷார்பத்தும் ஒருவர். அதுதொடர்பாக 2014-ம் ஆண்டில் இருந்து விசாரணை நடந்து வருகிறது. அதன் முடிவில், ஷார்பத் நேற்று பெஷாவரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவருடைய 2 குழந்தைகளுக்கும் போலி அடையாள அட்டை வாங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளதால், அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் ஷார்பத் குலா (வயது 44). 1984-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் போர் மூண்டபோது, அவர் 12 வயது சிறுமியாக இருந்தார். போருக்கு நடுவே, அங்கு இருக்க முடியாமல், பாகிஸ்தானுக்கு அகதிகளாக குடிபெயர்ந்தவர்களில் அவரும் ஒருவர். பெஷாவர் அருகே ஒரு அகதி முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டார்.
பச்சை நிற கண்களுடன் வித்தியாசமான சிறுமியாக தோன்றிய அவரை ‘நேஷனல் ஜியோகிரபி’ பத்திரிகையின் புகைப்படக்காரர் படம் பிடித்து ‘ஆப்கன் மோனலிசா’ என்ற அடைமொழியுடன் அட்டைப்படத்தில் வெளியிட்டார். அதனால், ஷார்பத் குலா உலகப்புகழ் பெற்றார். வளர்ந்த பிறகு, பாகிஸ்தானியர் ஒருவரை மணந்து கொண்ட ஷார்பத் குலா, 2 குழந்தைகளுக்கும் தாயானார்.
ஆப்கன் அகதிகள் ஆயிரக்கணக்கானோர், போலி அடையாள அட்டையுடன் பாகிஸ்தானில் தங்கி இருக்கிறார்கள். அவர்களில் ஷார்பத்தும் ஒருவர். அதுதொடர்பாக 2014-ம் ஆண்டில் இருந்து விசாரணை நடந்து வருகிறது. அதன் முடிவில், ஷார்பத் நேற்று பெஷாவரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவருடைய 2 குழந்தைகளுக்கும் போலி அடையாள அட்டை வாங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளதால், அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X