என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவின் உறவை முழுவதும் முறித்து கொள்வதாக சொல்லவில்லை: பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ பல்டி
Byமாலை மலர்21 Oct 2016 11:48 PM GMT (Updated: 21 Oct 2016 11:48 PM GMT)
அமெரிக்கா உடனான உறவை முழுவதும் முறித்து கொள்வதாக சொல்லவில்லை என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.
மணிலா:
ஆசிய கண்டங்களில் மிகவும் அரசியல் சூழல் நிலவி வருகிறது. அமெரிக்காவுக்கும், சீனாவிற்கும் இடையேயான மறைமுகப் போர் உச்சநிலையை அடைந்திருக்கும் நேரம் இது. இதனிடையே தென் சீனக் கடல் விவகாரம் ஆசிய நாடுகளிடயே புதிய பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
சீனாவின் பீஜிங் நகரில் பயணம் மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ அமெரிக்க உறவில் இருந்து பிரிந்து செல்வதாக நேற்று முன் தினம் அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்நாட்டுடன் கூட்டுப்போர் பயிற்சியும் இனியும் கிடையாது என்று ரோட்ரிகோ தெரிவித்து இருந்தார்.
இதனால் அமெரிக்கா உடனான உறவை முறித்து கொள்வதாக பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவித்தது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்கா உடனான உறவை முழுவதும் முறித்து கொள்வதாக சொல்லவில்லை என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.
சீனாவில் நான்கு நாள் பயணம் மேற்கொண்டு மீண்டும் பிலிப்பைன்ஸ் திரும்பிய பின்னர் மணிலா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.
இது குறித்து ரோட்ரிகோ கூறுகையில், “ நீண்ட நாள் கூட்டணி நாடான அமெரிக்காவுடன் அதிக அளவிலான உறவை வைத்து கொள்ள போவதில்லை என்று தான் கூறினேன். ஆனால் வெளியுறவுக் கொள்கையில் சீனா உடனான உறவை பலப்படுத்துவோம்” என்றார்.
ஆசிய கண்டங்களில் மிகவும் அரசியல் சூழல் நிலவி வருகிறது. அமெரிக்காவுக்கும், சீனாவிற்கும் இடையேயான மறைமுகப் போர் உச்சநிலையை அடைந்திருக்கும் நேரம் இது. இதனிடையே தென் சீனக் கடல் விவகாரம் ஆசிய நாடுகளிடயே புதிய பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
சீனாவின் பீஜிங் நகரில் பயணம் மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ அமெரிக்க உறவில் இருந்து பிரிந்து செல்வதாக நேற்று முன் தினம் அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்நாட்டுடன் கூட்டுப்போர் பயிற்சியும் இனியும் கிடையாது என்று ரோட்ரிகோ தெரிவித்து இருந்தார்.
இதனால் அமெரிக்கா உடனான உறவை முறித்து கொள்வதாக பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவித்தது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்கா உடனான உறவை முழுவதும் முறித்து கொள்வதாக சொல்லவில்லை என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.
சீனாவில் நான்கு நாள் பயணம் மேற்கொண்டு மீண்டும் பிலிப்பைன்ஸ் திரும்பிய பின்னர் மணிலா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.
இது குறித்து ரோட்ரிகோ கூறுகையில், “ நீண்ட நாள் கூட்டணி நாடான அமெரிக்காவுடன் அதிக அளவிலான உறவை வைத்து கொள்ள போவதில்லை என்று தான் கூறினேன். ஆனால் வெளியுறவுக் கொள்கையில் சீனா உடனான உறவை பலப்படுத்துவோம்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X