என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈராக்: கார் குண்டு தாக்குதலில் 12 பேர் பலி
Byமாலை மலர்24 Sep 2016 7:36 AM GMT (Updated: 24 Sep 2016 8:34 AM GMT)
ஈராக் நாட்டின் திக்ரித் நகரில் இன்று போலீஸ் சோதனைச் சாவடிமீது தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பாக்தாத்:
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திக்ரித் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அரசுப்படைகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைப்பற்றின.
இந்நிலையில், திக்ரித் நகரின் நுழைவு வாயிலில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியின்மீது இன்று ஒரு காரில் வந்தவர்கள் துப்பாக்கிகளால் சுட்டதில் 4 போலீசார் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பின்னர் வேகமாக தப்பிச் சென்ற அந்த காரில் இருந்த ஒருவன் அங்கிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்ற பின்னர், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை இயக்கியதில் அந்தக்கார் வெடித்து சிதறியது.
இந்த தாக்குதலில் அவ்வழியாக சென்ற 8 பேர் பலியாகினர், 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திக்ரித் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அரசுப்படைகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைப்பற்றின.
இந்நிலையில், திக்ரித் நகரின் நுழைவு வாயிலில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியின்மீது இன்று ஒரு காரில் வந்தவர்கள் துப்பாக்கிகளால் சுட்டதில் 4 போலீசார் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பின்னர் வேகமாக தப்பிச் சென்ற அந்த காரில் இருந்த ஒருவன் அங்கிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்ற பின்னர், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை இயக்கியதில் அந்தக்கார் வெடித்து சிதறியது.
இந்த தாக்குதலில் அவ்வழியாக சென்ற 8 பேர் பலியாகினர், 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X