என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் இந்திய வாலிபரை குத்திக்கொன்ற அறைத் தோழர் கைது
Byமாலை மலர்20 July 2016 4:54 AM GMT (Updated: 20 July 2016 4:54 AM GMT)
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் இந்திய வாலிபரை குத்திக்கொன்ற அறைத் தோழரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நியூயார்க்:
ஆந்திர மாநில தலைநகரான ஐதராபாத் அருகிலுள்ள காச்சிகுடா பகுதியை சேர்ந்தவர் சன்கீர்த்(24), அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் கணினி மென்பொறியாளராக பணியாற்றிவந்த சன்கீர்த், வேறு சில நண்பர்களுடன் ஆஸ்டின் நகரில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் அவருடன் தங்கியிருந்த சாய் சந்தீப் கவுட் என்பவர் சன்கீர்த்-தை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட சன்கீர்த்தின் உயிர் வழியிலேயே பிரிந்தது.
இதற்கிடையே, கொலையாளி சாய் சந்திப்பை உள்ளூர் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சன்கீர்த்துக்கும், சாய் சந்திப்பிற்கும் இடையே தொடங்கிய வாக்குவாதம் கைகலப்பாக முற்றியதால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் மேற்படிப்புக்காக அமெரிக்காவிற்கு சென்ற சன்கீர்த், படிப்பு முடிந்ததும் மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் கணினி மென்பொறியாளராக வேலையில் சேர்ந்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள சன்கீர்த்தின் குடும்பத்தினர் அவருடைய சடலத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநில தலைநகரான ஐதராபாத் அருகிலுள்ள காச்சிகுடா பகுதியை சேர்ந்தவர் சன்கீர்த்(24), அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் கணினி மென்பொறியாளராக பணியாற்றிவந்த சன்கீர்த், வேறு சில நண்பர்களுடன் ஆஸ்டின் நகரில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் அவருடன் தங்கியிருந்த சாய் சந்தீப் கவுட் என்பவர் சன்கீர்த்-தை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட சன்கீர்த்தின் உயிர் வழியிலேயே பிரிந்தது.
இதற்கிடையே, கொலையாளி சாய் சந்திப்பை உள்ளூர் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சன்கீர்த்துக்கும், சாய் சந்திப்பிற்கும் இடையே தொடங்கிய வாக்குவாதம் கைகலப்பாக முற்றியதால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் மேற்படிப்புக்காக அமெரிக்காவிற்கு சென்ற சன்கீர்த், படிப்பு முடிந்ததும் மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் கணினி மென்பொறியாளராக வேலையில் சேர்ந்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள சன்கீர்த்தின் குடும்பத்தினர் அவருடைய சடலத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X