என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பண்ருட்டி பஸ் நிலையம் அருகே அனாதையாக கிடந்த பெண் குழந்தை மீட்பு
பண்ருட்டி:
பண்ருட்டி நகராட்சி துப்பரவு பணியாளர்கள் பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் இந்திரா காந்தி சாலையில் ஜவுளிக்கடை அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள புதர் பகுதியில் இருந்து குழந்தை அழும் குரல் கேட்டது. உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அங்கு பிறந்த ஒரு வாரமான அழகான பெண் குழந்தை அனாதையாக கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தி அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியது. இதைத்தொடர்ந்து கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் அங்கு வந்தனர். அனாதையாக கிடந்த பெண் குழந்தையை ஆர்வமுடன் பார்த்தனர்.
அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் என்பவர் அந்த அழகிய பெண்குழந்தையை மீட்டு தனது வீட்டுக்கு கொண்டு சென்றார்.
பச்சிளம்பெண் குழந்தையை புதரில் வீசி சென்றது யார்? என்று பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்