search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகரெட் பழக்கத்தை கைவிடுவதற்கு சாப்ட்வேர் உருவாக்கிய சென்னை பெண்
    X

    சிகரெட் பழக்கத்தை கைவிடுவதற்கு சாப்ட்வேர் உருவாக்கிய சென்னை பெண்

    போர்ப்ஸ் பத்திரிகை சிகரெட் பழக்கத்தை கைவிடுவதற்கு சாப்ட்வேர் உருவாக்கிய அக்சயாவை இளம் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக தேர்வு செய்து பாராட்டி உள்ளது.

    சென்னை:

    அமெரிக்காவில் இருந்து வாரம் இரு முறை வெளியாகும் பத்திரிகை போர்ப்ஸ்.

    இந்த பத்திரிகை உலகின் பல நாடுகளில் 11 மொழிகளில் வெளிவருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களையும், சிறந்த மனிதர்களையும் தேர்வு செய்து இந்த பத்திரிகை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர்கள் பட்டியலை அந்த பத்திரிகை நேற்று வெளியிட்டது.

    அந்த பட்டியலில் இருப்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 600 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் 30 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளம் கண்டு பிடிப்பாளர்கள் பட்டியலும் உள்ளது.

    அந்த இளம் சாதனையாளர்களில் ஒருவராக சென்னையைச் சேர்ந்த அக்சயா சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.

    பிறகு மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். தற்போது அவர் அங்குள்ள மாசாசூட்ஸ் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வருகிறார்.

    படித்துக் கொண்டே புதிய சாப்ட்வேர்களை உருவாக்கும் பணிகளிலும் அக்சயா ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் அவர் சிகரெட், பீடி, சுருட்டு போன்ற புகைப் பழகத்தில் ஒருவர் தன்னை விடுவித்து கொள்வதற்கான அதிநவீன சாப்ட்வேரை உருவாக்கியுள்ளார்.

    ஒருவர் சிகரெட் புகைக்க வேண்டும் என்று நினைத்தவுடன் எதற்காக அந்த எண்ணம் தோன்றியது என்பதை அந்த சாப்ட்வேர் சொல்லி விடும். அது மட்டுமின்றி புகை பிடிப்பதை தடுக்கும் வகையில் எச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் அந்த சாப்ட்வேர் சொல்லும்.

    இதன் மூலம் நாளடைவில் புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து ஒருவர் விடுதலை பெற முடியும் என்று அக்சயா கூறுகிறார். இந்த சாப்ட்வேரை இன்னும் 4 மாதங்களில் சந்தையில் அறிமுகப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

    இதை பாராட்டி போர்ப்ஸ் பத்திரிகை அக்சயாவை இளம் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக தேர்வு செய்து பாராட்டி உள்ளது.

    Next Story
    ×