search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து நல்ல தகவல் வரும்: கடம்பூர் ராஜூ பேட்டி
    X

    அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து நல்ல தகவல் வரும்: கடம்பூர் ராஜூ பேட்டி

    அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து விரைவில் நல்ல தகவல் வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

    பொதுமக்கள் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் தான் முதல் -அமைச்சர் அந்த அறிவிப்பை வெளியிட்டார். மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது அவரது வாரிசு என்று யாரையும் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது தான் தீபா, தீபக் தங்களை ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறிக்கொள்கிறார்கள்.

    வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை அனைத்து தரப்பினரும் வரவேற்கின்றனர். சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்வது குறித்து குழு பேசி முடிவெடுக்கும்.

    நடிகர் கமல்ஹாசன் சிறந்த நடிகர். ஆனால் அரசியல் குறித்து அவர் கூறும் கருத்துகள் பக்குவம் இல்லாத கருத்துகள். அவருடைய கருத்துகளால் நல்ல நடிகராக இருந்த கமல்ஹாசன் காமெடி நடிகர் போல் மாறிவிட்டார். ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்திருக்கும் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து. இந்த கருத்தால் அணிகள் இணைப்பில் எந்த தாமதமும் ஏற்படாது. அணிகள் இணைப்பு குறித்து விரைவில் நல்ல தகவல் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×