search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் மே தின பொதுக்கூட்டம்: தென்சென்னையில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்
    X

    அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் மே தின பொதுக்கூட்டம்: தென்சென்னையில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்

    அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் மே தின பொதுக்கூட்டத்தில் தென்சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    சென்னை:

    மே தினத்தையொட்டி வருகிற 1-ந்தேதி அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

    தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.வளர்மதி, நவநீதகிருஷ்ணன் எம்.பி., வி.என்.ரவி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசுகிறார்கள்.

    மேலும் பொதுக்கூட்டங்களில் பேசுபவர்கள் விவரம் வருமாறு:-

    வடசென்னை தெற்கில் அமைச்சர் டி.ஜெயக்குமார், விஜயகுமார் எம்.பி., மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா.

    வடசென்னை வடக்கில் டாக்டர் வேணுகோபால் எம்.பி., வெற்றிவேல் எம்.எல்.ஏ., தாடி ராசு, ராஜா.

    தென்சென்னை வடக்கில் மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன், கோகுல இந்திரா, கே.பாண்டுரங்கன், அர்ஜூனன்.

    காஞ்சீபுரம் கிழக்கில் பண்ருட்டி ராமச்சந்திரன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், தனபால். காஞ்சீபுரம் மேற்கில் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, வி.சோமசுந்தரம், கோ.கணேசன். காஞ்சீபுரம் மத்திய மாவட்டத்தில் டாக்டர் வைகைச் செல்வன், எஸ்.ஆறுமுகம், எம்.என்.வெங்கடேசன்.

    திருவள்ளூர் கிழக்கில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., குப்பன், விஜய்பாபு.

    திருவள்ளூர் மேற்கில் எம்.எல்.ஏ.க்கள் நரசிம்மன் சிறுணியம் பலராமன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, பி.மோகன்.

    Next Story
    ×