என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருத்துறைப்பூண்டி அருகே 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது: ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலக்கொருக்கையில் வசிப்பவர் தம்புசாமி (54) விவசாயி. இவர் கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. தீ மளமளவென பரவி அருகில் இருந்த ராமலிங்கம்(50) மற்றும் சபாபதி ஆகியோர் வீடும் தீப்பிடித்தது. உடனடியாக தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தீ அணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் வீரமணி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இருப்பினும் வீட்டில் இருந்த கட்டில், பீரோ மிக்சி, கிரைண்டர் , டிவி உள்ளிட்ட வீட்டுஉபயோகப் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் அருகில் ஏராளமான கூரை வீடுகள் இருந்தன.
அங்கும் தீ பரவாமல் தடுத்தனர். தீ விபத்தில் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப்பொருட்கள் எரிந்து நாசமாயின. இது சம்பந்தமாக திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் உள்ளிட்டோர் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்