search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிக்கல் அருகே விபத்துக்குள்ளான காரில் திருடிய 3 பேர் கைது
    X

    சிக்கல் அருகே விபத்துக்குள்ளான காரில் திருடிய 3 பேர் கைது

    சிக்கல் அருகே விபத்துக்குள்ளான காரில் இருந்து டயர், பேட்டரி மற்றும் உதிரி பாகங்களை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம்:

    ராமேசுவரத்திற்கு தினமும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 18-ந்தேதி கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒரு கார் ராமநாதபுரம் அருகே உள்ள சிக்கல் பகுதியில் விபத்துக்குள்ளானது.

    அந்த கார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சிக்கல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசண்முகநாதன் அங்கு ரோந்து வந்தபோது காரில் இருந்த டயர் மாயமாகி இருப்பதை பார்த்தார். மேலும் பேட்டரி, டேப்ரெக் கார்டர் மற்றும் பொருட்கள் திருட்டுபோய் இருப்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து சிக்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து விபத்துக்குள்ளான காரில் திருடியதாக நம்பியான் வலசையை சேர்ந்த புருசோத்தமன்(வயது25), பாண்டி (32), உதயகுமார் (24) ஆகியோரை கைது செய்தார்.

    Next Story
    ×