என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிக்கல் அருகே விபத்துக்குள்ளான காரில் திருடிய 3 பேர் கைது
Byமாலை மலர்24 April 2017 9:43 AM GMT (Updated: 24 April 2017 9:45 AM GMT)
சிக்கல் அருகே விபத்துக்குள்ளான காரில் இருந்து டயர், பேட்டரி மற்றும் உதிரி பாகங்களை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்:
ராமேசுவரத்திற்கு தினமும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 18-ந்தேதி கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒரு கார் ராமநாதபுரம் அருகே உள்ள சிக்கல் பகுதியில் விபத்துக்குள்ளானது.
அந்த கார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சிக்கல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசண்முகநாதன் அங்கு ரோந்து வந்தபோது காரில் இருந்த டயர் மாயமாகி இருப்பதை பார்த்தார். மேலும் பேட்டரி, டேப்ரெக் கார்டர் மற்றும் பொருட்கள் திருட்டுபோய் இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து சிக்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து விபத்துக்குள்ளான காரில் திருடியதாக நம்பியான் வலசையை சேர்ந்த புருசோத்தமன்(வயது25), பாண்டி (32), உதயகுமார் (24) ஆகியோரை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X