search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு ஓட்டு போடுவதை பெண்கள் நிறுத்த வேண்டும்: ராமதாஸ்
    X

    அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு ஓட்டு போடுவதை பெண்கள் நிறுத்த வேண்டும்: ராமதாஸ்

    ரூ.200, 300 வாங்கிக்கொண்டு இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கும் ஓட்டு போடுவதை பெண்கள் நிறுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
    செங்கல்பட்டு:

    உச்சநீதிமன்றத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 3,321 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு பாராட்டு விழா மற்றும் வெற்றி விழா பொதுக்கூட்டம் பா.ம.க. கட்சி சார்பில் திருக்கழுக்குன்றத்தில் நடந்தது.

    மாநில துணை பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று பாட்டில்களில் அச்சடித்து ஒட்டி விட்டு மக்களை குடிக்க சொல்கின்றனர். உங்களுக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கின்றது. ரூ.200, 300 வாங்கிக்கொண்டு இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கும் ஓட்டு போடுவதை பெண்கள் நிறுத்த வேண்டும். அந்த தப்பை மீண்டும் செய்யா தீர்கள். சிந்திக்க நேரம் வந்து விட்டது.

    குடியை கொண்டு வந்தவர்களை மீண்டும் கோட்டையில் உட்கார வைக்காதீர்கள்.

    இவ்வாறு அவர்பேசினார்.

    கூட்டத்தில் டாக்டர் அன்புமணி பேசுகையில், 3321 மதுக்கடைகளை பா.ம.க. கட்சி மூடி இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு முயற்சித்து வருகிறது. இந்த சாலைகளை மாநகராட்சி சாலையாகவும் நகராட்சி மற்றும் ஊரக சாலையாகவும் மாற்றி 2,000 மது பானக்கடைகளை திறக்க முயற்சித்து வருகிறது. நாம் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு சாராயம் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

    சாராயம் விற்பதற்காகவே சாலைகளின் பெயர்களை மாற்றுகின்றனர். நாங்கள் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடருவோம். மாவட்ட தலைநகரங்களில் இதை கண்டித்து வரும் 27-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளோம் என்று பேசினார்.

    கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர், கி.பாலு, மாநில துணை தலைவர் கவிஞர் திலகாமணி, மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா, காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் வாசு, மாநில துணை பொதுசெயலாளர் பொன். கங்காதரன், மாநில துணை தலைவர் சக்தி கமலா அம்மாள், மாவட்ட தலைவர் கணேசமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் கணேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×