என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கள்ளக்காதலியுடன் உல்லாசம்: மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் மீது வழக்கு
தேனி:
தேனி மூவேந்திரன் தெருவைச் சேர்ந்தவர் கபிலன். இவருக்கும் நதியா என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் கபிலன் புதுக்கோட்டையைச் சேர்நத ரம்யா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு மனைவியை கொடுமைப்படுத்தி வந்தார்.
மனைவியின் நகைகள் அனைத்தையும் பறித்து வைத்துக் கொண்டு மேலும் 20 பவுன் நகை கேட்டு கொடுமைப்படுத்தினார்.
இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நதியா புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்த தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் மனைவியை கொடுமைப்படுத்திய கபிலன், மாமியார் சுசீலா, கள்ளக்காதலி ரம்யா ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்