என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆனைமலை அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி
Byமாலை மலர்22 April 2017 9:32 AM GMT (Updated: 22 April 2017 9:33 AM GMT)
ஆனைமலையை அடுத்துள்ள ஆழியாறு வனப்பகுதி அருகில் ஓட்டக்கரடு என்னும் பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஆனைமலை:
ஆனைமலையை அடுத்துள்ள ஆழியாறு வனப்பகுதி அருகில் ஓட்டக்கரடு என்னும் பாறை பகுதி உள்ளது.
வருவாய்த் துறைக்குச் சொந்தமான இந்த மலைப் பகுதியில் குகை போன்ற அமைப்புடன் பாறைகள் உள்ளன.
மேலும் அடர்ந்த காடுகள் உள்ளதால் வன விலங்குகள் தங்குவதற்கு ஏற்ற சூழல் உள்ளது. இந்த மலையைச் சுற்றிலும் உள்ள பட்டா நிலங்களில் விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர்.
இவர்களின் ஆடு, கன்றுக்குட்டி மற்றும் நாய் உள்ளிட்டவற்றை சிறுத்தை அடித்துக் கொன்று பாறை இடுக்கில் பதுங்கிக் கொள்கிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வனத்துறையிடம் புகார் செய்ததின் பேரில் கடந்த சில நாட்களாக வனத்துறை மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் கொண்ட குழுவினர் இரவில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் சிறுத்தையை நேரில் பார்த்தனர். வனத்துறையினரின் நடமாட்டம் அறிந்த சிறுத்தை காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடி விட்டது.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ஓட்டக்கரடு மலைப் பகுதியைச் சுற்றிலும் சிறுத்தையின் கால் தடம் இருந்ததை வனத்துறையினர் பார்த்தனர்.
இதனையடுத்து வனப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனைமலையை அடுத்துள்ள ஆழியாறு வனப்பகுதி அருகில் ஓட்டக்கரடு என்னும் பாறை பகுதி உள்ளது.
வருவாய்த் துறைக்குச் சொந்தமான இந்த மலைப் பகுதியில் குகை போன்ற அமைப்புடன் பாறைகள் உள்ளன.
மேலும் அடர்ந்த காடுகள் உள்ளதால் வன விலங்குகள் தங்குவதற்கு ஏற்ற சூழல் உள்ளது. இந்த மலையைச் சுற்றிலும் உள்ள பட்டா நிலங்களில் விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர்.
இவர்களின் ஆடு, கன்றுக்குட்டி மற்றும் நாய் உள்ளிட்டவற்றை சிறுத்தை அடித்துக் கொன்று பாறை இடுக்கில் பதுங்கிக் கொள்கிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வனத்துறையிடம் புகார் செய்ததின் பேரில் கடந்த சில நாட்களாக வனத்துறை மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் கொண்ட குழுவினர் இரவில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் சிறுத்தையை நேரில் பார்த்தனர். வனத்துறையினரின் நடமாட்டம் அறிந்த சிறுத்தை காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடி விட்டது.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ஓட்டக்கரடு மலைப் பகுதியைச் சுற்றிலும் சிறுத்தையின் கால் தடம் இருந்ததை வனத்துறையினர் பார்த்தனர்.
இதனையடுத்து வனப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X