search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் கல்லால் அடித்து வாலிபர் கொலை: வாலிபர் வெறிச்செயல்
    X

    தூத்துக்குடியில் கல்லால் அடித்து வாலிபர் கொலை: வாலிபர் வெறிச்செயல்

    தூத்துக்குடியில் கஞ்சா கேட்டு கொடுக்காததால் வாலிபரை கல்லால் அடித்து கொன்றவர் போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கே.வி.கே.நகரை சேர்ந்தவர் கணேசன் மகன் அருள் உதயகுமார் (வயது 22). இவர் டெக்ரேசன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று அண்ணாநகர் கோவிலில் நடந்த திருவிழாவிற்கு அருள் உதயகுமார் நேற்று இரவு சென்றார். அங்கு திருவிழா பார்த்து விட்டு இரவு 12 மணியளவில் வீட்டுக்கு திரும்பினார்.

    அண்ணாநகர் 12-வது தெரு பகுதியில் அவர் வந்தபோது கே.வி.கே.நகரை சேர்ந்த மைக்செட் தொழிலாளி லூக்மான் (22) என்பவர் அருள் உதயகுமாரை வழிமறித்து கஞ்சா கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது தன்னிடம் கஞ்சா இல்லை என்று அருள் உதயகுமார் கூறினாராம்.

    இதில் ஆத்திரம் அடைந்த லூக்மான் அருகில் கிடந்த கல்லை எடுத்து அருள் உதயகுமாரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் படுகாயம் அடைந்த அருள் உதயகுமார் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள் உதயகுமார் இன்று அதிகாலை இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லூக்மானை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை மத்தியபாகம் போலீசாரிடம் லூக்மான் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×