search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பு
    X

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பு

    டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இன்று கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் கோ‌ஷங்களை எழுப்பினர். மேலும் விவசாயத்துக்கு ஆதரவான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய அட்டைகளை கைகளில் வைத்திருந்தனர்.

    இதேபோல, விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை சூலூர் பஸ் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்நதது. இதில் திரளான விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×