search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் மூட்டு வலி சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மி‌ஷம்: டாக்டர் மீது வழக்கு
    X

    திருப்பூரில் மூட்டு வலி சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மி‌ஷம்: டாக்டர் மீது வழக்கு

    திருப்பூரில் மூட்டு வலி சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் டாக்டர் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி வசந்தாமணி (வயது 37). இவர் நேற்று திருப்பூர் ரூரல் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 5 மாதங்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தேன், இதனால் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். இருப்பினும் மூட்டு வலி குணமாகவில்லை.

    இதைதொடர்ந்து எனது தோழி மூலம் திருப்பூர் ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கடந்த 27-ந் தேதி சிகிச்சைக்காக சென்றேன். அப்போது டாக்டர் எக்ஸ்ரே- ஸ்கேன் எடுத்து வர சொன்னார்.

    பின்னர் மறுநாள் சிகிச்சைக்காக சென்றேன். அப்போது ஒரு தனியறையில் டாக்டர், எனது மூட்டை பரிசோதிக்க வேண்டும் என்று கூறினார். இந்த சமயத்தில் டாக்டர் என்னிடம் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்து நான் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினேன்.

    இந்த சம்பவம் பற்றி எனது கணவரிடம் தெரிவித்தேன். செக்ஸ் சில்மி‌ஷம் செய்த டாக்டர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த புகார் மனு மீது திருப்பூர் ரூரல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் டாக்டர் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப் பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×