என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சீர்காழி அருகே 3 மாத கர்ப்பிணி கொலை: கணவர் கைது
சீர்காழி:
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள திருப்புங்கூரை சேர்ந்தவர் பரம்மநாதன். இவரது மகள் தேவி (28).
இவருக்கும் சிதம்பரம் எல்லாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தச்சு தொழிலாளி சரவணன் (32) என்பவருக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. தேவி தற்போது 3 மாத கர்ப்பமாக இருந்தார்.
அவர் தனது தாய் வீட்டிற்கு வந்து இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் வீட்டின் கொல்லைப்புறத்தில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தேவியின் தந்தை பரம்மநாதன் வைத்தீஸ்வரன் கோவில் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் மர்மசாவு என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தேவியின் கணவர் சரவணனை பிடித்து விசாரணை மேற் கொண்டனர். அப்போது அவர் மனைவியை கொன்றது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.
அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில், கடந்த 28-ந் தேதி நள்ளிரவு தேவியை பார்க்க வீட்டின் பின் பக்கமாக வந்ததாகவும், தேவியுடன் பேசிக் கொண்டு இருந்த போது குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
நான் தேவியை கீழே தள்ளி விட்டேன். பின்னர் அங்கிருந்து சென்று விட்டேன். அதன் பின்னர் தான் அவர் இறந்தது தெரியவந்தது என்று கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்