search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட சங்கீதா
    X
    கொலையுண்ட சங்கீதா

    ஆத்தூர் அருகே ரிக் அதிபர் மனைவி கொலையில் திடுக்கிடும் தகவல்

    ஆத்தூர் அருகே ரிக் அதிபர் மனைவி கொலையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளது. அவருடன் 2 வாலிபர்கள் உல்லாசமாக இருந்தது தெரிய வந்து உள்ளது.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் வேலுமணி (வயது 42 ). ரிக் அதிபர். இவரது மனைவி சங்கீதா (37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டும், இளைய மகள் ஆத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    கடந்த 24-ந்தேதி வேலுமணி திருப்பூர் சென்று இருந்தார். இந்த நிலையில் 26-ந்தேதி வீட்டில் ஒரு கை மற்றும் உடலில் பிளேடால் அறுக்கப்பட்ட நிலையில் சங்கீதா பிணமாக கிடந்தார். மற்றொரு கை அருகே வி‌ஷபாட்டில் இருந்தது. இது குறித்து ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்.கார்த்திக்குமார், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சங்கீதா உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில் அவர் கொலை செய்யப்பட்டதும், அவர் இறப்பதற்கு முன்பு 2 பேருடன் உல்லாசமாக இருந்ததும் தெரிய வந்தது. இதன் பேரில் ஆத்தூர் போலீசார் 3 தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கினர். விசாரணையில் கள்ளத்தொடர்பு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சங்கீதா பலருடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தது தெரிய வந்தது. சங்கீதாவின் கணவரான வேலுமணி ரிக் தொழில் செய்வதால் அவரது வீட்டுக்கு வடமாநில வாலிபர்களை அடிக்கடி அழைத்து வருவார்.

    அப்போது வடமாநில வாலிபர் ஒருவருக்கும், சங்கீதாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு உள்ளது. அவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சங்கீதாவுடன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. அவருடன் தொடர்பில் இருக்கும் போதே இன்னொருவருடன் அவர் தொடர்பு வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த கள்ளத்தொடர்பு போட்டியில் கொலை நடந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இதில் சங்கீதாவுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் பிளேடால் சங்கீதாவின் கையை அறுத்து உள்ளார்.

    பின்னர் அவரை தள்ளி விட்டதில் அவர் கீழே விழுந்து உள்ளார். இதில் தலையின் பின்பக்கம் காயம் ஏற்பட்டு அவர் இறந்து இருக்கலாம் .கொலையை மறைக்க அந்த வாலிபர் வி‌ஷபாட்டிலை அவரது கையில் வைத்து சென்று இருக்கலாம் என்று கருதுகிறார்கள். கொலையாளி மேலும் சில ஆபாச படங்களை பிளேடால் கிழித்து போட்டு சென்றதும் தெரிய வந்தது. கொலையாளி எதற்கு ஆபாச படத்தை கிழித்து வீட்டில் போட்டு சென்றார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கொலையில் ஈடுபட்டது ஒரு வாலிபரா அல்லது 2 பேரா என்று தெரியவில்லை.

    வடமாநில வாலிபர் மற்றும் அடிக்கடி சங்கீதா வீட்டுக்கு வந்து சென்ற அதே பகுதியில் வசிக்கும் வாலிபர் மற்றும் கோவையைச் சேர்ந்த வாலிபர் ஆகிய 3 பேரை பிடித்தால் கொலையாளி யார் என்பது தெரிய வரும். மேலும் சங்கீதாவுடன் முதலில் ஒருவர் உல்லாசமாக இருந்து விட்டு சென்று இருக்கலாம் இதை இன்னொரு வாலிபர் பார்த்து அவரும் சங்கீதாவுடன் உல்லாசமாக இருந்து விட்டு வேறு ஒரு வாலிபருடன் தொடர்பு வைத்து இருப்பது குறித்து சங்கீதாவிடம் கேட்டு அதனால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

    சங்கீதாவின் செல்போனை போலீசார் கைப்பற்றி கொலை செய்யப்பட்ட 26-ந்தேதி அவர் யார்-யாருடன் பேசினார் என்றும் விசாரித்து வருகிறார்கள். மேலும் இந்தக்கொலை தொடர்பாக அவரது கணவர் உள்பட 2 பேரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×