search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
    X

    தேனி அருகே மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

    தேனி அருகே பள்ளி மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே உள்ள கோட்டூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகள் சபிதா (வயது16). அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு அதே பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (23) என்ற வாலிபர் ஜெயசீலன் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த சபிதாவுக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். பக்கத்தில் படுத்திருந்த சபிதாவின் தங்கை திடுக்கிட்டு எழுந்து சத்தம்போடவே ஜெயபிரகாஷ் தப்பி ஒடிவிட்டார்.

    மறுநாள் காலை மீண்டும் ஜெயசீலன் வீட்டுக்கு வந்து இரவில் நடந்த வி‌ஷயத்தை வெளியே சொல்லக்கூடாது. மீறி கூறினால் உனது மகள்தான் என்னை அழைத்ததாக பரப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    அதோடு நிற்காமல் சபிதா பள்ளி செல்லும் போதெல்லாம் விசில் அடித்து இரட்டை அர்த்தத்தில் பேசி உள்ளார். தட்டிகேட்ட ஜெயசீலனை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து மாணவி சபிதா குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் தகவல் தெரிவித்து விட்டு தேனி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜெயபிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×