என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
தேனி:
தேனி அருகே உள்ள கோட்டூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகள் சபிதா (வயது16). அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு அதே பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (23) என்ற வாலிபர் ஜெயசீலன் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த சபிதாவுக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். பக்கத்தில் படுத்திருந்த சபிதாவின் தங்கை திடுக்கிட்டு எழுந்து சத்தம்போடவே ஜெயபிரகாஷ் தப்பி ஒடிவிட்டார்.
மறுநாள் காலை மீண்டும் ஜெயசீலன் வீட்டுக்கு வந்து இரவில் நடந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது. மீறி கூறினால் உனது மகள்தான் என்னை அழைத்ததாக பரப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
அதோடு நிற்காமல் சபிதா பள்ளி செல்லும் போதெல்லாம் விசில் அடித்து இரட்டை அர்த்தத்தில் பேசி உள்ளார். தட்டிகேட்ட ஜெயசீலனை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து மாணவி சபிதா குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் தகவல் தெரிவித்து விட்டு தேனி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜெயபிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்