என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் அந்தி அர்ஜூனா மரணம்: மு.க.ஸ்டாலின் அனுதாபம்
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், மிகத் திறமையான சட்ட போராளியுமான டி.ஆர்.அந்தி அர்ஜூனா மும்பையில் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவிற்கு தலைவர் கருணாநிதி சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச்சிறந்த அரசியல் சட்ட மூத்த வழக்கறிஞரான அந்தி அர்ஜூனா மகாராஷ்டிர மாநில தலைமை வழக்கறிஞராகவும், இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியவர் என்பதை நினைவு கூறுகிறேன்.
அவரை நாடு இழந்துள்ளது ஈடுகட்ட முடியாத பேரிழப்பு ஆகும். அந்தி அர்ஜூனா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கழகம் ஊழலுக்கு எதிராக நடத்திய நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தில் பேருதவியாகவும் பக்கபலமாகவும் இருந்தவர். அவரது உடலுக்கு மும்பை தி.மு.க. நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்