search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைவரிடமும் அன்பு காட்டும் மன நோயாளியை குடும்பத்துடன் சேர்த்து வைக்க கிராம மக்கள் முயற்சி
    X

    அனைவரிடமும் அன்பு காட்டும் மன நோயாளியை குடும்பத்துடன் சேர்த்து வைக்க கிராம மக்கள் முயற்சி

    அனைவரிடமும் அன்பு செலுத்தும் மன நோயாளியை அவரது குடும்பத்துடன் சேர்த்து வைக்க கிராம மக்கள் முயற்சி எடுத்துள்ளனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது சூரக்குண்டு. இங்கு 4 வழிச்சாலை அருகே அமைந்துள்ளது முனிக்கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவில் வழியாக செல்லும் பெரும்பாலான வாகனங்கள், கோவிலில் சாமி கும்பிட்டு செல்வது வழக்கம்.

    இந்த கோவில் அமைந்துள்ள பகுதியில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் வந்திருந்தார். அவர் யாருக்கும் எந்த தொந்தரவு செய்யாமலும் சாமி கும்பிட வருபவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு திரிந்து வந்தார்.

    பின்னர் நாளடைவில் அங்குள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி, கால்நடைகள் மீது அன்பு காட்டி உள்ளார். இதனால் இப்பகுதி கிராம மக்கள் இவர் மீது கருணை காட்டி வருகின்றனர்.

    குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே இவர் தனது பெயர் ரவீந்திரன் என்று கூறினார். மேலும் எந்த விபரமும் கூறவில்லை. அவருடைய வலது காலில் அறுவை சிகிச்சை செய்த தழும்பு மட்டும் உள்ளது. இவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பற்றிய விவரம் இவருக்கு தெரியவில்லை.

    எனவே கிராம மக்கள் இவரை எப்படியாவது இவரது குடும்பத்தினரிடம் சேர்த்து வைக்க வேண்டும் என கூறுகின்றனர்.

    Next Story
    ×