search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரப்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டுடன் 3 வாலிபர்கள் சிக்கினர்
    X

    ஊரப்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டுடன் 3 வாலிபர்கள் சிக்கினர்

    ஊரப்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    செங்கல்பட்டு:

    ஊரப்பாக்கம் ரேவதி புரத்தில் உள்ள ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுடன் சிலர் பதுங்கி இருப்பதாக கூடுவாஞ்சேரி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது 4 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த வீட்டில் பதுங்கி இருந்த 3 பேரை கைது செய்தனர். அவர்கள் பழைய குற்றவாளிகள் என்று தெரிய வருகிறது.

    முன்விரோதத்தில் எதிரிகளை தீர்த்துக்கட்ட வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்தனரா என்று விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×