search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளியங்குடியில் கட்டிட தொழிலாளியை அடித்துக் கொன்றவர்கள் யார்?: போலீசார் தீவிர விசாரணை
    X

    புளியங்குடியில் கட்டிட தொழிலாளியை அடித்துக் கொன்றவர்கள் யார்?: போலீசார் தீவிர விசாரணை

    புளியங்குடியில் கட்டிட தொழிலாளியை அடித்துக்கொன்றவர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புளியங்குடி:

    புளியங்குடி கனக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த அனந்தப்பன் மகன் ராமர் (37), கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. நேற்று இரவு 7 மணி அளவில் ராமர் புளியங்குடி வடக்கு ரத வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு குடிப்பதற்காக நாராயணபேரி குளத்துக்கரைக்கு சென்றார்.

    அங்குள்ள ஆவணி அம்மன் கோயில் அருகே திறந்தவெளி திடலில் மது குடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த சிலருக்கும் ராமருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் கம்பியால் ராமரை தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை தாக்கியவர்கள் தப்பியோடி விட்டனர்.

    தகவலறிந்த புளியங்குடி இன்ஸ்பெக்டர் ரகுராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று ராமரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 10 மணி அளவில் இறந்தார். இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமரை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×