என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புளியங்குடியில் கட்டிட தொழிலாளியை அடித்துக் கொன்றவர்கள் யார்?: போலீசார் தீவிர விசாரணை
Byமாலை மலர்25 March 2017 11:21 AM GMT (Updated: 25 March 2017 11:21 AM GMT)
புளியங்குடியில் கட்டிட தொழிலாளியை அடித்துக்கொன்றவர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியங்குடி:
புளியங்குடி கனக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த அனந்தப்பன் மகன் ராமர் (37), கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. நேற்று இரவு 7 மணி அளவில் ராமர் புளியங்குடி வடக்கு ரத வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு குடிப்பதற்காக நாராயணபேரி குளத்துக்கரைக்கு சென்றார்.
அங்குள்ள ஆவணி அம்மன் கோயில் அருகே திறந்தவெளி திடலில் மது குடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த சிலருக்கும் ராமருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் கம்பியால் ராமரை தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை தாக்கியவர்கள் தப்பியோடி விட்டனர்.
தகவலறிந்த புளியங்குடி இன்ஸ்பெக்டர் ரகுராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று ராமரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 10 மணி அளவில் இறந்தார். இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமரை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
புளியங்குடி கனக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த அனந்தப்பன் மகன் ராமர் (37), கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. நேற்று இரவு 7 மணி அளவில் ராமர் புளியங்குடி வடக்கு ரத வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு குடிப்பதற்காக நாராயணபேரி குளத்துக்கரைக்கு சென்றார்.
அங்குள்ள ஆவணி அம்மன் கோயில் அருகே திறந்தவெளி திடலில் மது குடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த சிலருக்கும் ராமருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் கம்பியால் ராமரை தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை தாக்கியவர்கள் தப்பியோடி விட்டனர்.
தகவலறிந்த புளியங்குடி இன்ஸ்பெக்டர் ரகுராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று ராமரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 10 மணி அளவில் இறந்தார். இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமரை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X