என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொலைத்து விடுவேன்: போலீஸ்காரருக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க. பிரமுகர் கைது
Byமாலை மலர்20 March 2017 12:13 PM GMT (Updated: 20 March 2017 12:13 PM GMT)
திருவண்ணாமலையில் போலீஸ்காரருக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமைலை ஆடையூர் காலனியை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 30). தி.மு.க. பிரமுகரான இவர், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கருணாநிதி மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர், கிரிவல பாதையில் உள்ள அபய மண்டபம் அருகே உள்ள புறக்காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு பிரிவு போலீஸ்காரர் லோகேஸிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறு முற்றியபோது, போலீஸ்காரரை ‘தொலைத்து விடுவேன்’ என்றுக் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, போலீஸ்காரர் லோகேஸ் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து தி.மு.க. பிரமுகர் கருணாநிதியை கைது செய்தனர். தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X