search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொலைத்து விடுவேன்: போலீஸ்காரருக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க. பிரமுகர் கைது
    X

    தொலைத்து விடுவேன்: போலீஸ்காரருக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க. பிரமுகர் கைது

    திருவண்ணாமலையில் போலீஸ்காரருக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமைலை ஆடையூர் காலனியை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 30). தி.மு.க. பிரமுகரான இவர், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கருணாநிதி மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அவர், கிரிவல பாதையில் உள்ள அபய மண்டபம் அருகே உள்ள புறக்காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு பிரிவு போலீஸ்காரர் லோகேஸிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    தகராறு முற்றியபோது, போலீஸ்காரரை ‘தொலைத்து விடுவேன்’ என்றுக் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து, போலீஸ்காரர் லோகேஸ் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து தி.மு.க. பிரமுகர் கருணாநிதியை கைது செய்தனர். தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×