search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருமகள் முகக்தில் வெந்நீர் ஊற்றிய மாமியார்
    X

    மருமகள் முகக்தில் வெந்நீர் ஊற்றிய மாமியார்

    கோவை சூலூர் அருகே மகன் காதல் திருமணம் செய்தது பிடிக்காததால் மருமகள் முகக்தில் வெந்நீர் ஊற்றிய மாமியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள சுல்தான் பேட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ஆனந்தி (வயது 27). இவர்கள் 2 பேரும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    ஆனந்தியை ரவி காதல் திருமணம் செய்தது அவரது தாயார் கனகரத்தினத்துக்கு பிடிக்கவில்லை. இதனால் ஆனந்தியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    சம்பவத்தன்று ஆனந்திக்கும், கனகரத்தினத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கனகரத்தினம் ஆனந்தியின் முகத்தில் அடுப்பில் கொதித்து கொண்டு இருந்த வெந்நீரை எடுத்து ஊற்றினர். இதில் வலி தாங்க முடியாமல் ஆனந்தி சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஆனந்தியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×