என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆரோவில் கடற்கரையில் புதுவை பல்கலைக்கழக மாணவியை கற்பழிக்க முயற்சி: 6 பேரை பிடித்து விசாரணை
வானூர்:
மேற்கு வங்காள மாநிலம் துர்காப்பூரை சேர்ந்தவர் அனேகாபென்குப்தா (வயது 24). புதுவை பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இவரும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பீபிதாதாசும் அதே பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிக்கிறார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.
ஆரோவில் கடற்கரையில் இரவு 9 மணிக்கு அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது 6 மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். பீபிதாதாசை தாக்கி விரட்டினர்.
பின்னர் அனேகா பென்குப்தாவை தாக்கி அவரிடம் இருந்த செல்போன், கிரிடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு ஆகியவைகளை பறித்தனர். அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
பீபிதாதாஸ் கிழக்கு கடற்கரை சாலைக்கு ஓடி சென்று அங்கிருந்தவர்களை அழைத்தார். உடனே மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். அவர்கள் ஆரோவில் போலீசில் புகார் செய்ய கூறினர். எனவே, அவர்கள் கவர்னர் கிரண்பேடியிடம் இது குறித்து தெரிவித்தனர். அவர் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரநாயரிடம் தகவல் தெரிவித்தார். அவரின் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஆரோவில் போலீசில் மாணவி புகார் செய்தார். இதையொட்டி பிள்ளைச்சாவடி, பொம்மையார்பாளையம் பகுதியை சேர்ந்த 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர்களை மாணவி அடையாளம் காட்டுகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்