search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணம் அருகே காதலிப்பதாக நடித்து இளம்பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது
    X

    கும்பகோணம் அருகே காதலிப்பதாக நடித்து இளம்பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது

    கும்பகோணம் அருகே பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே கடம்பக்குடி சோழபுரம் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணை அதேபகுதியை சேர்ந்த முருகானந்தம்(33) என்பவர் காதலித்து வந்துள்ளார். வீட்டிற்கு தெரியாமல் அவர்கள் செல்போனில் பேசிக்கொண்டும், தனிமையில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.

    அப்போது முருகானந்தம் அடிக்கடி அந்த பெண்ணை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். இதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் நைசாக பேசி திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி கருவைகலைக்க செய்துள்ளார்.

    இந்நிலையில் முருகானந்தம் அந்த பெண்ணை வற்புறுத்தி அவரிடம் மீண்டும் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் அந்த பெண் 2 வது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார்.இதை முருகானந்தத்திடம் தெரிவித்துள்ளார். அதனை கலைத்துவிடும்படி அவர் கூறியுள்ளார். அதற்கு அப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

    கர்ப்பமடைந்த நிலையில் உன்னை திருமணம் செய்தால் உறவினர்கள் தவறாக நினைப்பார்கள் அதனால் கருவைகலைத்துவிடு. பின்பு உன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்கிறேன் என முருகானந்தம் கூறியதை நம்பி அந்த பெண் 2-வது முறையாக கருக்கலைப்பு செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை சந்திப்பதை முருகானந்தம் குறைத்துக்கொண்டார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முருகானந்தம் அந்த பெண்ணை சந்திக்கவில்லை. இதனால் அந்த பெண் அவரது செல்போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரது அழைப்பை ஏற்காமல் அதனை அவர் துண்டித்துள்ளார்.

    இதையடுத்து முருகானந்தத்தின் வீட்டிற்கு சென்று ஏன் தன்னிடம் பேசுவதில்லை என கேட்டுள்ளார். அதற்கு அவர் உன்னிடம் பேச எனக்கு விருப்பமில்லை. உன்னை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்து மனமுடைந்தார்.

    இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் முருகானந்தம் தன்னை காதலிப்பதாக கூறி கற்பழித்து ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.

    Next Story
    ×