search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரறிவாளனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த காட்சி.
    X
    பேரறிவாளனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த காட்சி.

    வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடந்தது. இதற்காக அவர் ஜெயிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளன் சிறுநீரக தொற்று நோய், மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு சிறுநீரக தொற்றுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வருகிறார்.

    இதையடுத்து 6 மாதங்களுக்கு ஒரு தடவை மருத்துவ பரிசோதனை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

    இன்று காலை 9.55 மணிக்கு ஜெயிலில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றனர். அங்கு சிறுநீரக தொற்றுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். மூட்டு வலிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    Next Story
    ×