என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
படகு விபத்தில் பலியானவர்களுக்கு ஜி.கே.வாசன் இரங்கல்
Byமாலை மலர்27 Feb 2017 6:43 AM GMT (Updated: 27 Feb 2017 6:43 AM GMT)
மணப்பாடு பகுதி கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருச்செந்தூர் அருகே மணப்பாடு பகுதி கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலர் பலியானது துரதிஷ்ட வசமானது. மிகவும் வேதனைக்குரியது. திருச்சி மற்றும் திருச்செந்தூர் படுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்டோர் மீனவர் படகில் கடலுக்கு சுற்றுலாச் சென்றனர்.
விபத்துக்குள்ளான படகில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம். தங்களது சொந்த லாபத்திற்காக பராமரிப்பு இல்லாமல், அரசின் உரிமம் பெறாமல் படகில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
படகு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X