search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவல்துறையினரால் பாதிப்பு: தி.மு.க. சட்ட வல்லுனர் குழுவை அணுகலாம் - ஆர்.சண்முகசுந்தரம்
    X

    காவல்துறையினரால் பாதிப்பு: தி.மு.க. சட்ட வல்லுனர் குழுவை அணுகலாம் - ஆர்.சண்முகசுந்தரம்

    காவல்துறையினரால் பாதிக்கப்படுபவர்கள் தி.மு.க. சட்ட வல்லுனர் குழுவை அணுகலாம் என தி.மு.க. சட்டத்துறை தலைவர் ஆர்.சண்முகசுந்தரம், செயலாளர் இரா.கிரிராஜன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
    சென்னை:

    தி.மு.க. சட்டத்துறை தலைவர் ஆர்.சண்முகசுந்தரம், செயலாளர் இரா.கிரிராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் ஆகியவற்றில் கருத்துகளை சுதந்திரமாக தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்காமல், அரசியல் மற்றும் பொதுகருத்துகளை சாதாரண குடிமகன் என்ற வகையில் தெரிவிப்பது என்பது இன்றைய காலக்கட்டத்தில் வழக்கத்தில் உள்ளது.

    தி.மு.க. அனுதாபிகள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில், யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்காமல் வெளியிடும் கருத்துகளை பொறுத்துக் கொண்டு, மறுப்பு தெரிவிக்க, திராணியற்ற நிலையில் உள்ளதால், காவல்துறையின் மூலம் அச்சுறுத்தி, அவர்கள்மீது வழக்கு தொடருவோம் என்று மிரட்டி வருவதாக பல்வேறு புகார்கள் தி.மு.க. தலைமைக்கு வந்த வண்ணம் உள்ளன.

    எனவே தி.மு.க. சட்ட ஆலோசகரும், மூத்த வக்கீலுமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் பாதிப்புக்கு உள்ளாகின்றவர்கள் வக்கீல் என்.ஆர்.இளங்கோ-9840036053, வக்கீல் பி.குமரேசன்- 9444017090, வக்கீல் எம்.ஷாஜகான்-9840200059, வக்கீல் பாபு முத்துமீரான்- 9840078957, வக்கீல் அ.சரவணன்- 9840052191 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×