என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கம் அருகே அம்மன் கோவிலில் வெள்ளி சிலை, நகை கொள்ளை
Byமாலை மலர்26 Feb 2017 10:43 AM GMT (Updated: 26 Feb 2017 10:43 AM GMT)
செங்கம் அருகே அம்மன் கோவிலில் மர்ம கும்பல் புகுந்து வெள்ளி சாமி சிலை, தங்க நகை, உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
செங்கம்:
செங்கம் அருகே உள்ள உச்சிமலை குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் உள்ளது. இங்கு நாகம்மன், கெங்கையம்மனுக்கு தனித் தனியே சன்னதிகள் உள்ளன.நேற்று இரவு மர்ம நபர்கள் கோவில் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அம்மன் சன்னதி மூலஸ்தானத்தில் இருந்த வெள்ளி சாமி சிலையை எடுத்தனர்.
அருகே உள்ள நாகம்மன், கெங்கையம்மன் சன்னதிகளில் அம்மன் நகை மற்றும் உண்டியல்களை உடைத்து பணத்தை அள்ளி சென்று விட்டனர்.
இன்று காலை கோவிலில் கொள்ளை நடந்தது கண்டு திடுக்கிட்ட ஊழியர்கள் இது பற்றி பாய்ச்சல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஆரணி செங்கம் பகுதிகளில் சாமி சிலைகள் திருட்டு தொடர்ந்து நடக்கிறது. இதில் ஈடுபடும் கும்பலை கூண்டோடு பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X