என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடன்குடியில் கருப்பட்டி விலை திடீர் உயர்வு
Byமாலை மலர்22 Feb 2017 4:46 AM GMT (Updated: 22 Feb 2017 4:46 AM GMT)
உடன்குடியில் கருப்பட்டி விலை உயர்ந்துள்ளது. 10 கிலோ கொண்ட சிப்பம் என்ற கொட்டான் ரூ.2800-க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
உடன்குடி:
கருப்பட்டி உற்பத்தியில் உடன்குடி வட்டார பகுதிக்கு ஒரு சிறப்பு உண்டு. ‘உடன்குடி கருப்பட்டி’ என்ற ஊர் பெயரோடு ஊர், ஊராய் பவனி வரும். சென்னை, மும்பை, ஆந்திரா, கேரளா போன்ற பல வெளி மாநிலங்களில் தமிழர்களில் அதிகமாக வசிக்கும் ஊர்களில் உள்ள கடைகளில் “உடன்குடி கருப்பட்டி” இங்கே கிடைக்கும் என்று அறிவிப்பு போர்டு வைத்து விற்பனை செய்வார்கள்.
வருகிற ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தான் கருப்பட்டி உற்பத்தி தொடங்கும். அன்று புதிய கருப்பட்டிகள் கடைகளுக்கு விற்பனைக்கு வரும். அப்போதுதான் விலை குறைய வாய்ப்பு வரும். தற்போது கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் உற்பத்தி செய்த கருப்பட்டிகள் விலை உயர்ந்து விட்டது.
10 கிலோ கொண்ட சிப்பம் என்ற கொட்டான் ரூ.2800-க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.300-க்கும், 5 கிலோ என்ற ½ சிப்பம் வாங்கினால் ரூ.1400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பனை மரத்தில் ஏறி, பதனீர் தரும் பாளைகளை பக்குவப்படுத்தி, கூடுதலாக பதனீர் எடுக்கும் அளவிற்கு தொழில் தெரிந்த ஆட்கள் தற்போது இல்லை என்றும், பனை ஏறுவதற்கே ஆட்கள் கிடைப்பதில்லையே இவர்கள் தொழிலை எப்படி கற்று கொள்வார்கள் என்றும் இத்தொழிலில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.
இதனால் புதிய கருப்பட்டி உற்பத்தி விலை குறையாது என்று இத்தொழிலில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.
கருப்பட்டி உற்பத்தியில் உடன்குடி வட்டார பகுதிக்கு ஒரு சிறப்பு உண்டு. ‘உடன்குடி கருப்பட்டி’ என்ற ஊர் பெயரோடு ஊர், ஊராய் பவனி வரும். சென்னை, மும்பை, ஆந்திரா, கேரளா போன்ற பல வெளி மாநிலங்களில் தமிழர்களில் அதிகமாக வசிக்கும் ஊர்களில் உள்ள கடைகளில் “உடன்குடி கருப்பட்டி” இங்கே கிடைக்கும் என்று அறிவிப்பு போர்டு வைத்து விற்பனை செய்வார்கள்.
வருகிற ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தான் கருப்பட்டி உற்பத்தி தொடங்கும். அன்று புதிய கருப்பட்டிகள் கடைகளுக்கு விற்பனைக்கு வரும். அப்போதுதான் விலை குறைய வாய்ப்பு வரும். தற்போது கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் உற்பத்தி செய்த கருப்பட்டிகள் விலை உயர்ந்து விட்டது.
10 கிலோ கொண்ட சிப்பம் என்ற கொட்டான் ரூ.2800-க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.300-க்கும், 5 கிலோ என்ற ½ சிப்பம் வாங்கினால் ரூ.1400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பனை மரத்தில் ஏறி, பதனீர் தரும் பாளைகளை பக்குவப்படுத்தி, கூடுதலாக பதனீர் எடுக்கும் அளவிற்கு தொழில் தெரிந்த ஆட்கள் தற்போது இல்லை என்றும், பனை ஏறுவதற்கே ஆட்கள் கிடைப்பதில்லையே இவர்கள் தொழிலை எப்படி கற்று கொள்வார்கள் என்றும் இத்தொழிலில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.
இதனால் புதிய கருப்பட்டி உற்பத்தி விலை குறையாது என்று இத்தொழிலில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X