என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி மத்திய சிறையில் இன்று கைதி தூக்கில் தற்கொலை
Byமாலை மலர்20 Feb 2017 4:24 AM GMT (Updated: 20 Feb 2017 4:24 AM GMT)
திருச்சி மத்திய சிறையில் இன்று கைதி பழனிச்சாமி தற்கொலை செய்து கொண்டார். பழனிச்சாமி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
திருச்சி:
திருச்சி மத்திய சிறையில் சுமார் 2 ஆயிரம் கைதிகள் உள்ளனர். இதில் 600 பேர் ஆயுள் தண்டனை கைதிகள் ஆவர். இவர்கள் தவிர அடி தடி, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், விசாரணை கைதிகள் ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் ‘பி’ பிளாக்கில் திருச்சி சமயபுரம் அருகே உள்ள நரசிங்கமங்கலத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 32) என்பவரும் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையில் மேல் சட்டையால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த மற்ற கைதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய பழனிச்சாமியின் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பழனிச்சாமி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பழனிச்சாமி கடந்த 29-ந் தேதி பஸ்சில் வந்தபோது மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகம் வேகத்தடை அருகே இறங்குவதற்காக பஸ்சை நிறுத்தும்படி டிரைவரிடம் கேட்டுள்ளார். அதற்கு டிரைவர் பஸ் நிறுத்தத்தில் தான் நிறுத்துவேன் என கூறியுள்ளார்.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பஸ்சை நிறுத்தாததால் ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி தாலுகா அலுவலகம் அருகே பஸ் நிறுத்தத்தில் இறங்கிய பிறகு கல்லால் பஸ் கண்ணாடியை உடைத்துள்ளார். இதுகுறித்து பஸ் டிரைவர் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பழனிச்சாமியை பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக கைது செய்தனர். அதன் பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பழனிச்சாமி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜனவரி 29-ந்தேதி முதல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பழனிச்சாமி ஜாமீனிலும் வெளியே செல்ல முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். சிறையில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்த நிலையில்தான் அவர் இன்று தற்கொலை செய்துள்ளார்.
திருச்சி மத்திய சிறையில் சுமார் 2 ஆயிரம் கைதிகள் உள்ளனர். இதில் 600 பேர் ஆயுள் தண்டனை கைதிகள் ஆவர். இவர்கள் தவிர அடி தடி, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், விசாரணை கைதிகள் ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் ‘பி’ பிளாக்கில் திருச்சி சமயபுரம் அருகே உள்ள நரசிங்கமங்கலத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 32) என்பவரும் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையில் மேல் சட்டையால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த மற்ற கைதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய பழனிச்சாமியின் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பழனிச்சாமி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பழனிச்சாமி கடந்த 29-ந் தேதி பஸ்சில் வந்தபோது மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகம் வேகத்தடை அருகே இறங்குவதற்காக பஸ்சை நிறுத்தும்படி டிரைவரிடம் கேட்டுள்ளார். அதற்கு டிரைவர் பஸ் நிறுத்தத்தில் தான் நிறுத்துவேன் என கூறியுள்ளார்.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பஸ்சை நிறுத்தாததால் ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி தாலுகா அலுவலகம் அருகே பஸ் நிறுத்தத்தில் இறங்கிய பிறகு கல்லால் பஸ் கண்ணாடியை உடைத்துள்ளார். இதுகுறித்து பஸ் டிரைவர் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பழனிச்சாமியை பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக கைது செய்தனர். அதன் பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பழனிச்சாமி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜனவரி 29-ந்தேதி முதல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பழனிச்சாமி ஜாமீனிலும் வெளியே செல்ல முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். சிறையில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்த நிலையில்தான் அவர் இன்று தற்கொலை செய்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X