என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சசிகலா அணி பக்கம் சாய்ந்த புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்: எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு
புதுச்சேரி:
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. தமிழக முதல்-அமைச்சராக இருந்த பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.
அவருக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும், 12 எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதற்கிடையே புதுவை அ.தி.மு.க.விலும் பிளவு ஏற்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஓம்சக்தி சேகருக்கு ஆதரவாக மாநில நிர்வாகிகள் ஒரு பிரிவினரும், தொகுதி நிர்வாகிகளும் கூண்டோடு வெளியேறினார்கள்.
ஆனால், புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எந்த அணிக்கும் செல்லாமல் அமைதி காத்து வந்தனர். இதேபோல் புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமனும் மவுனம் சாதித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார். அவரது பதவி ஏற்பு விழாவில் புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன், கோகுலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.
புதிதாக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கும், அமைச்சர்களுக்கும் அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதன் மூலம் புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்