என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி பலி
Byமாலை மலர்20 Jan 2017 11:03 AM GMT (Updated: 20 Jan 2017 11:03 AM GMT)
தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே உள்ள சூடசந்திரம் ஊராட்சிக்குட்பட்ட கீஜனகுப்பம் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் விவசாயிகள் ராகி பயிர் பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து 10 யானைகள் சூடசந்திரம் கிராமத்திற்குள் புகுந்தது.
அப்போது அந்த யானைகள் கிராமத்தில் ஒரு இடத்தில் ராகி பயிர் அறுவடை செய்யப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்ததை அழித்து நாசம் செய்தது.
அங்கு பயிர்களை பாதுகாத்து வந்த விவசாயி தேப்பேகவுடு(65) விவசாயி என்பவரை யானை ஒன்று தூக்கி வீசியது. இதில் அவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கும், தளி போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் சம்பவ இடத்துக்கு வந்து தேப்பேகவுடு உடலை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே உள்ள சூடசந்திரம் ஊராட்சிக்குட்பட்ட கீஜனகுப்பம் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் விவசாயிகள் ராகி பயிர் பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து 10 யானைகள் சூடசந்திரம் கிராமத்திற்குள் புகுந்தது.
அப்போது அந்த யானைகள் கிராமத்தில் ஒரு இடத்தில் ராகி பயிர் அறுவடை செய்யப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்ததை அழித்து நாசம் செய்தது.
அங்கு பயிர்களை பாதுகாத்து வந்த விவசாயி தேப்பேகவுடு(65) விவசாயி என்பவரை யானை ஒன்று தூக்கி வீசியது. இதில் அவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கும், தளி போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் சம்பவ இடத்துக்கு வந்து தேப்பேகவுடு உடலை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X