என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூரில் தி.மு.க.வினர் ரெயில் மறியல்: முன்னாள் எம்.எல்.ஏ.இள.புகழேந்தி உள்பட 300 பேர் கைது
Byமாலை மலர்20 Jan 2017 8:40 AM GMT (Updated: 20 Jan 2017 8:40 AM GMT)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பிற்கு எதிராகவும் தி.மு.க சார்பில் கடலூரில் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.இள.புகழேந்தி உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பிற்கு எதிராகவும் தி.மு.க சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மாநில மாணவரணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இள.புகழேந்தி தலைமையில் தி.மு.க.வினர் திரண்டனர். அங்கிருந்து ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலத்தில் மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சிவகுமார், சுப்புராம், நாராயணசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, வக்கீல்கள் சிவராஜ், சுந்தர், பிரபுமுத்து, நகர நிர்வாகிகள் பெரியசாமி, கோவலன், முன்னாள் கவுன்சிலர் தமிழரசன், மாணவரணி அகஸ்டின் பிரபாகரன் உள்பட ஏராளாமான தி.மு.க வினர் கலந்து கொண்டனர்.
அவர்கள் பாரதி சாலை, அண்ணா மேம்பாலம், லாரன்ஸ் சாலை வழியாக திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர். உடனே போலீசார் ரெயில் நிலைய வாசல் கதவை மூடினார்கள். அதனை தொடர்ந்து தி.மு.க.வினர் ரெயில் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 4 மணி நேரம் தாமதமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்துக்கு வந்து அடைந்தது. இதனை பார்த்த தி.மு.க வினர் போலீஸ் தடையை மீறி ஓடி ரெயில் நிலையத்துக்குள் சென்று ரெயிலை மறிக்க முயன்றனர்.
அப்போது போலீசுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதை மீறி தி.மு.க வினர் தண்டவாளத்தில் அமர்ந்து ரெயிலை மறித்தனர். அவர்களிடம் போராட்டத்தை கைவிட்டு செல்லுமாறு போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் அதனை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி உள்பட தி.மு.க வினர் 300 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்ற முயற்சித்தனர். அதனை ஏற்க மறுத்த தி.மு.க.வினர் ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கண்டன கோஷம் எழுப்பி கொண்டு தனியார் மண்டபத்திற்கு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி தலைமையில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பிற்கு எதிராகவும் தி.மு.க சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மாநில மாணவரணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இள.புகழேந்தி தலைமையில் தி.மு.க.வினர் திரண்டனர். அங்கிருந்து ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலத்தில் மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சிவகுமார், சுப்புராம், நாராயணசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, வக்கீல்கள் சிவராஜ், சுந்தர், பிரபுமுத்து, நகர நிர்வாகிகள் பெரியசாமி, கோவலன், முன்னாள் கவுன்சிலர் தமிழரசன், மாணவரணி அகஸ்டின் பிரபாகரன் உள்பட ஏராளாமான தி.மு.க வினர் கலந்து கொண்டனர்.
அவர்கள் பாரதி சாலை, அண்ணா மேம்பாலம், லாரன்ஸ் சாலை வழியாக திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர். உடனே போலீசார் ரெயில் நிலைய வாசல் கதவை மூடினார்கள். அதனை தொடர்ந்து தி.மு.க.வினர் ரெயில் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 4 மணி நேரம் தாமதமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்துக்கு வந்து அடைந்தது. இதனை பார்த்த தி.மு.க வினர் போலீஸ் தடையை மீறி ஓடி ரெயில் நிலையத்துக்குள் சென்று ரெயிலை மறிக்க முயன்றனர்.
அப்போது போலீசுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதை மீறி தி.மு.க வினர் தண்டவாளத்தில் அமர்ந்து ரெயிலை மறித்தனர். அவர்களிடம் போராட்டத்தை கைவிட்டு செல்லுமாறு போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் அதனை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி உள்பட தி.மு.க வினர் 300 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்ற முயற்சித்தனர். அதனை ஏற்க மறுத்த தி.மு.க.வினர் ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கண்டன கோஷம் எழுப்பி கொண்டு தனியார் மண்டபத்திற்கு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி தலைமையில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X