என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வார்தா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை: ம.நடராஜன்
Byமாலை மலர்18 Jan 2017 7:14 AM GMT (Updated: 18 Jan 2017 7:14 AM GMT)
வா்ாதா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை என்று தஞ்சாவூரில் ம.நடராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் கடந்த 18 ஆண்டுகளாக கலை இலக்கிய விழா நடத்தி வருகிறோம். முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் எங்கள் குடும்பம் மட்டுமின்றி தமிழக மக்களும் துயரத்தில் உள்ளனர்.
எனவே இந்த ஆண்டு கலை இலக்கிய விழா நடத்த வேண்டுமா? என நினைத்தோம். மக்களின் வேண்டுகோளை ஏற்று விழாவை நடத்தினோம். எப்போதும் 3 நாட்கள் தான் விழா நடத்துவோம். இந்த ஆண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்பதால் 4 நாட்கள் விழாவை நடத்தினோம்.
காவிரியில் தண்ணீர் இல்லாததால் டெல்டா விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர். டெல்டா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வறட்சி நிலவுகிறது.
காவிரியில் தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்காமல் துரோகம் செய்து விட்டது. மேலும் முல்லைப்பெரியாறு பிரச்சனையும் உள்ளது. இது அடுக்கு மேல் அடுக்கு பிரச்சனையாக உள்ளது.
இதனை பார்க்கும் போது நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா அல்லது தனித்து விடப்பட்டோமா என்ற எண்ணத் தோன்றுகிறது.
சென்னையில் புயல் பாதிப்பால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனை மாநில அரசு ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டது. ஆனால் மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை.
சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது நல்ல பலமான கருவி, ஆட்களை கொண்டு உடனடியாக தமிழக அரசு சரி செய்து தமிழக மக்களின் துயரை துடைத்தது. இந்த விஷயத்தில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொண்டது. உதவி செய்ய முன் வரவில்லை.
நான் அ.தி.மு.க.வுக்காக பேசவில்லை. தமிழக மக்களுக்காக பேசுகிறேன். மத்திய அரசு புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
காவிரி பிரச்சனையில் தமிழக மக்களுக்கு உதவி செய்யவில்லை. அதேபோல தற்போது ஜல்லிக்கட்டு பிரச்சனையிலும் தமிழக மக்களுக்கு மோசம் செய்து வருகிறது.
தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றோடு இணைந்தது ஜல்லிக்கட்டு. பொங்கல் விழா கலாச்சார விழாவாகும். மனிதர்கள் மாடுகளை கடவுளாக பார்த்து கும்பிட்டு வருகிறார்கள்.
ஆனால் பீட்டா வழக்கை காரணம் காட்டி வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்வது நியாயம் இல்லை. எல்லா தலைவர்களும் அரசியலுக்காக பேசுகிறார்கள்.
ஜல்லிக்கட்டு பிரச்சனையில் மாணவர்களின் எழுச்சியை நான் பாராட்டுகிறேன். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டை நடத்த சட்டம் கொண்டு வர வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் பேச வேண்டும்.
மோடி நல்லவர் தான். கட்சிக்கு அப்பாற்பட்டவர். நாளையே என்னை கைது செய்தாலும் மோடி வாழ்க என்று தான் சொல்லுவேன். எனக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. நான் எந்த அதிகாரியிடனும் பேசியது உண்டா?
ஜெயலலிதா மரணத்தை கொச்சைப்படுத்த வேண்டாம். அவரது மரணத்தில் சந்தேகம் இல்லை.
தீபா, தீபக் எங்கள் பிள்ளைகள். அவர்களது எதிர்காலம் எங்களுக்கு ரொம்ப முக்கியம். ஆனால் தீபாவை சிலர் பின்னால் இருந்து தூண்டி விடுகின்றனர்.
இவ்வாறு ம. நடராஜன் கூறினார்.
தஞ்சையில் புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் கடந்த 18 ஆண்டுகளாக கலை இலக்கிய விழா நடத்தி வருகிறோம். முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் எங்கள் குடும்பம் மட்டுமின்றி தமிழக மக்களும் துயரத்தில் உள்ளனர்.
எனவே இந்த ஆண்டு கலை இலக்கிய விழா நடத்த வேண்டுமா? என நினைத்தோம். மக்களின் வேண்டுகோளை ஏற்று விழாவை நடத்தினோம். எப்போதும் 3 நாட்கள் தான் விழா நடத்துவோம். இந்த ஆண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்பதால் 4 நாட்கள் விழாவை நடத்தினோம்.
காவிரியில் தண்ணீர் இல்லாததால் டெல்டா விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர். டெல்டா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வறட்சி நிலவுகிறது.
காவிரியில் தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்காமல் துரோகம் செய்து விட்டது. மேலும் முல்லைப்பெரியாறு பிரச்சனையும் உள்ளது. இது அடுக்கு மேல் அடுக்கு பிரச்சனையாக உள்ளது.
இதனை பார்க்கும் போது நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா அல்லது தனித்து விடப்பட்டோமா என்ற எண்ணத் தோன்றுகிறது.
சென்னையில் புயல் பாதிப்பால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனை மாநில அரசு ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டது. ஆனால் மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை.
சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது நல்ல பலமான கருவி, ஆட்களை கொண்டு உடனடியாக தமிழக அரசு சரி செய்து தமிழக மக்களின் துயரை துடைத்தது. இந்த விஷயத்தில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொண்டது. உதவி செய்ய முன் வரவில்லை.
நான் அ.தி.மு.க.வுக்காக பேசவில்லை. தமிழக மக்களுக்காக பேசுகிறேன். மத்திய அரசு புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
காவிரி பிரச்சனையில் தமிழக மக்களுக்கு உதவி செய்யவில்லை. அதேபோல தற்போது ஜல்லிக்கட்டு பிரச்சனையிலும் தமிழக மக்களுக்கு மோசம் செய்து வருகிறது.
தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றோடு இணைந்தது ஜல்லிக்கட்டு. பொங்கல் விழா கலாச்சார விழாவாகும். மனிதர்கள் மாடுகளை கடவுளாக பார்த்து கும்பிட்டு வருகிறார்கள்.
ஆனால் பீட்டா வழக்கை காரணம் காட்டி வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்வது நியாயம் இல்லை. எல்லா தலைவர்களும் அரசியலுக்காக பேசுகிறார்கள்.
ஜல்லிக்கட்டு பிரச்சனையில் மாணவர்களின் எழுச்சியை நான் பாராட்டுகிறேன். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டை நடத்த சட்டம் கொண்டு வர வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் பேச வேண்டும்.
மோடி நல்லவர் தான். கட்சிக்கு அப்பாற்பட்டவர். நாளையே என்னை கைது செய்தாலும் மோடி வாழ்க என்று தான் சொல்லுவேன். எனக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. நான் எந்த அதிகாரியிடனும் பேசியது உண்டா?
ஜெயலலிதா மரணத்தை கொச்சைப்படுத்த வேண்டாம். அவரது மரணத்தில் சந்தேகம் இல்லை.
தீபா, தீபக் எங்கள் பிள்ளைகள். அவர்களது எதிர்காலம் எங்களுக்கு ரொம்ப முக்கியம். ஆனால் தீபாவை சிலர் பின்னால் இருந்து தூண்டி விடுகின்றனர்.
இவ்வாறு ம. நடராஜன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X