search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் மாணவி கற்பழித்து கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை
    X

    கரூர் மாணவி கற்பழித்து கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை

    கரூர் மாணவியை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் வனிதா (வயது 19) பிளஸ்-2 முடித்து விட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி அன்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (30), மணிகண்டன் ஆகியோர் வனிதாவை மோட்டார் சைக்கிளில் கடத்தி அருகே உள்ள வெற்றிலை தோட்டத்திற்கு கொண்டு சென்று கற்பழித்து கொலை செய்தனர்.

    இது குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரன், மணிகண்டன் 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கரூர் மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கை நீதிபதி குணசேகரன் விசாரித்தார். அப்போது மாணவியை கற்பழித்து கொன்ற ராமச்சந்திரனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.

    மேலும் ராமச்சந்திரனுக்கு உடந்தையாக இருந்த மணிகண்டனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×