search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவநாதசாமி கோவிலில் சிறப்பு முகூர்த்தத்தையொட்டி 50 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
    X
    தேவநாதசாமி கோவிலில் சிறப்பு முகூர்த்தத்தையொட்டி 50 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் 50 ஜோடிகளுக்கு இன்று திருமணம்

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் கார்த்திகை மாதமான இன்று சிறப்பு முகூர்த்த நாள் என்பதால் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
    கடலூர்:

    கடலூர் அருகேயுள்ள திருவந்திபுரத்தில் தேவநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது புதுவை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து தங்கள் நேர்ச்சையை செலுத்தலாம் என்பதால் பக்தர்கள் கூட்டத்துக்கு எப்போதும் குறைவிருக்காது.

    முகூர்த்த நாட்களில் தேவநாதசாமி கோவிலில் ஒரே நேரத்தில் அதிகம் திருமணங்கள் நடைபெறும். கார்த்திகை மாதமான இன்று சிறப்பு முகூர்த்த நாளாகும். இதையொட்டி இன்று தேவநாதசாமி கோவிலில் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

    50 ஜோடிகளின் உறவினர்களும் திருமணத்துக்கு வந்திருந்ததால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் தங்கள் வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்தியிருந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்தனர்.
    Next Story
    ×