search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு 4-வது நாளாக சிகிச்சை
    X

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு 4-வது நாளாக சிகிச்சை

    உடல்நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவன் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
    கோவை:

    கோவை நீலாம்பூரில் கடந்த 29-ந் தேதி காங்கிரஸ் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மறுநாள் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தது.

    4-வது நாளான இன்றும் அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×