search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடிமருந்து ஆலை விபத்தில் 18 பேர் பலி: சூமோட்டோ வழக்காக ஏற்க ஐகோர்ட்டு மறுப்பு
    X

    வெடிமருந்து ஆலை விபத்தில் 18 பேர் பலி: சூமோட்டோ வழக்காக ஏற்க ஐகோர்ட்டு மறுப்பு

    திருச்சி வெடிமருந்து ஆலை விபத்தில் 18 பேர் பலியானது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து சூமோட்டோ வழக்குப் பதிவு செய்ய மறுத்து விட்டது.

    மதுரை:

    திருச்சி மாவட்டம் துரையூர் அருகே உள்ள முருங்கப்பட்டி வெடிமருந்து தொழிற் சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 18 தொழிலாளர்கள் சிக்கி பலியானார்கள்.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த வக்கீல் முத்து கிருஷ்ணன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் திருச்சி துறையூர் வெடிமருந்து தொழிற் சாலையில் நடந்த விபத்து குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி நாகமுத்து ஆகியோர் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விபத்து தொடர்பாக மனுதாரரே பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

    Next Story
    ×