search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று 215-வது நினைவு தினம்: மருதுபாண்டியர்கள் சிலைக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி
    X

    இன்று 215-வது நினைவு தினம்: மருதுபாண்டியர்கள் சிலைக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி

    மருதுபாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    சிவகங்கை:

    சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்கள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியர்களின் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    காலை 8 மணி அளவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் மலர்விழி நினைவு மண்டபத்திற்கு வந்து மருது பாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    முன்னதாக நினைவு மண்டபத்தில் கலெக்டர் மலர்விழி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் இளங்கோ, போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. உமாதேவன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து மருது பாண்டியர்களின் வாரிசுதாரர்கள் ராமசாமி, சாத்தையா, பழனிக்குமார், பாண்டியன், வைரவசுந்தரம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்களது குடும்பத்தினரும், பொதுமக்களும் நினைவு மண்டபம் முன்பு பொங்கலிட்டு பூஜை செய்தனர்.

    காலை 9 மணி அளவில் அரசு சார்பில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், பாஸ்கரன் ஆகியோர் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×