என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்று 215-வது நினைவு தினம்: மருதுபாண்டியர்கள் சிலைக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி
Byமாலை மலர்24 Oct 2016 9:24 AM GMT (Updated: 24 Oct 2016 9:24 AM GMT)
மருதுபாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை:
சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்கள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியர்களின் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
காலை 8 மணி அளவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் மலர்விழி நினைவு மண்டபத்திற்கு வந்து மருது பாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக நினைவு மண்டபத்தில் கலெக்டர் மலர்விழி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் இளங்கோ, போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. உமாதேவன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து மருது பாண்டியர்களின் வாரிசுதாரர்கள் ராமசாமி, சாத்தையா, பழனிக்குமார், பாண்டியன், வைரவசுந்தரம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்களது குடும்பத்தினரும், பொதுமக்களும் நினைவு மண்டபம் முன்பு பொங்கலிட்டு பூஜை செய்தனர்.
காலை 9 மணி அளவில் அரசு சார்பில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், பாஸ்கரன் ஆகியோர் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்கள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியர்களின் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
காலை 8 மணி அளவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் மலர்விழி நினைவு மண்டபத்திற்கு வந்து மருது பாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக நினைவு மண்டபத்தில் கலெக்டர் மலர்விழி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் இளங்கோ, போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. உமாதேவன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து மருது பாண்டியர்களின் வாரிசுதாரர்கள் ராமசாமி, சாத்தையா, பழனிக்குமார், பாண்டியன், வைரவசுந்தரம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்களது குடும்பத்தினரும், பொதுமக்களும் நினைவு மண்டபம் முன்பு பொங்கலிட்டு பூஜை செய்தனர்.
காலை 9 மணி அளவில் அரசு சார்பில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், பாஸ்கரன் ஆகியோர் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X