என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூட்டிக்கிடந்த பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: கட்டிடம் இடிந்து தரைமட்டமானது
Byமாலை மலர்22 Oct 2016 2:29 AM GMT (Updated: 22 Oct 2016 2:29 AM GMT)
சங்கரன்கோவில் அருகே, பூட்டிக் கிடந்த பட்டாசு தொழிற்சாலையில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதில், கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் செல்லப்பட்டி அருகே கடந்த 3 ஆண்டுகளாக பட்டாசு தொழிற்சாலை ஒன்று பூட்டியே கிடந்தது. வெளிப்புற கேட் கதவு பூட்டப்பட்ட நிலையில் தொழிற்சாலைக்குள் இருந்த 11 அறைகள் திறந்து கிடந்தன.
இங்குள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து நேற்று மதியம் 1 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. வெடி சத்தம் கேட்டதும், அந்தப்பகுதியில் உள்ள வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதன் அருகில் உள்ள 2 தனியார் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளை வகுப்புகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினரும், போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது வெடிச்சத்தம் கேட்ட கட்டிடம் இடிந்து தரைமட்டமாக கிடந்தது.
விசாரணையில், ‘பட்டாசு தொழிற்சாலையை பூட்டியபோதே அதில் இருந்த அனைத்து மூலப்பொருட்களையும் அப்புறப்படுத்தி விட்டதாக உரிமையாளர்கள் கூறினர். காலியாக கிடந்த பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை. அதே சமயம், பூட்டிக் கிடந்த தொழிற்சாலையில் முன்பு பட்டாசு தயாரிக்கப்பட்ட 11 அறைகளும் திறந்து கிடந்துள்ளன.
இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் இரவு நேரத்தில் குறிப்பிட்ட அறையை வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தி வந்தனரா? அல்லது வேறு எந்த வகையில் வெடி விபத்து நடந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் செல்லப்பட்டி அருகே கடந்த 3 ஆண்டுகளாக பட்டாசு தொழிற்சாலை ஒன்று பூட்டியே கிடந்தது. வெளிப்புற கேட் கதவு பூட்டப்பட்ட நிலையில் தொழிற்சாலைக்குள் இருந்த 11 அறைகள் திறந்து கிடந்தன.
இங்குள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து நேற்று மதியம் 1 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. வெடி சத்தம் கேட்டதும், அந்தப்பகுதியில் உள்ள வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதன் அருகில் உள்ள 2 தனியார் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளை வகுப்புகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினரும், போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது வெடிச்சத்தம் கேட்ட கட்டிடம் இடிந்து தரைமட்டமாக கிடந்தது.
விசாரணையில், ‘பட்டாசு தொழிற்சாலையை பூட்டியபோதே அதில் இருந்த அனைத்து மூலப்பொருட்களையும் அப்புறப்படுத்தி விட்டதாக உரிமையாளர்கள் கூறினர். காலியாக கிடந்த பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை. அதே சமயம், பூட்டிக் கிடந்த தொழிற்சாலையில் முன்பு பட்டாசு தயாரிக்கப்பட்ட 11 அறைகளும் திறந்து கிடந்துள்ளன.
இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் இரவு நேரத்தில் குறிப்பிட்ட அறையை வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தி வந்தனரா? அல்லது வேறு எந்த வகையில் வெடி விபத்து நடந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X